அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நெல்லையில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வரும் 19ம் தேதி பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் திருநெல்வேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளையொட்டி அரசின் சார்பில் 19.04.2022 செவ்வாய் காலை 10.00 மணிக்கு திருநெல்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ. 5000/-, இரண்டாம்பரிசு ரூ, 3000/-, மூன்றாம் பரிசுத்தொகை ரூ. 2000/-- எனவும் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலிருந்து 02 மாணவர்கள் வீதமும், ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 02 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அரசுப்பள்ளியில் பயிலும் 02 மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ. 2000/-- வீதம் எனவும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
19.04.2022 அன்று பள்ளி மாணவர்களுக்கு காலை 10.00 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 03.00 மணிக்கும் திருநெல்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து போட்டிகள் நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ/ மாணவியர்கள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ( தொலைபேசி எண் 0462 2502521) தொடர்பு கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி / கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.