/* */

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

HIGHLIGHTS

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் ஆய்வு
X

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு  மேற்கொண்டார்

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மண்டல அளவிலான 10 மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு திட்டப் பணிகளின் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்ட பணிகள் ஆய்வை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் பச்சையாற்றின் குறுக்கே தமிழாகுறிச்சி என்ற இடத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பு அணை, பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.தொடர்ந்து நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை பொன்னாக்குடி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 வருடம் எந்த அதிகாரிகளும் வேலை செய்யவில்லை. அனைவருக்கும் பல வேலைகள் மறந்துவிட்டது. அமைச்சரவை பதவியை ஏற்றபின்னர் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட நதிநீர் இணைப்புத் திட்டபணி நான் ஆரம்பித்ததை நானே திறக்கவேண்டும் என விட்டுவிட்டார்கள்.

அதே போல அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது. நதி நீர் இணைப்பு திட்டம் முதல் இரண்டு பகுதிகள் 100% முடிந்துள்ளது. 3 ம் பகுதி 99% பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. 4 ம் பகுதி 58% பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் முழுமையாக மார்ச் 2023 ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என்றார் அமைச்சர் துரைமுருகன்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு , முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், அரசு அதிகாரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்