நெல்லை ஜெயேந்திர பள்ளியின் சார்பாக வாக்கு பதிவை வலியுறுத்தி இசை சி.டி வெளியீடு
நெல்லை மாவட்டம் சங்கர் நகர் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளியின் சார்பாக இசை வடிவில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி சி.டி உருவாக்கப்பட்டது. அதனை கலெக்டர் வெளியிட்டார்.
HIGHLIGHTS
சங்கர் நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன் விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 100% வாக்களிப்பு நடைபெற ஓட்டுரிமை நமது பெருமை என்ற வாக்காளர் விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது.
வாக்காளர் விழிப்புணர்வு குறுந்தகடை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர். ஆ. பெருமாள் பெற்றுக்கொண்டார் .
இந் நிகழ்வில் பள்ளி முதல்வர் உஷாராமன் , இசை ஆசிரியர் ஜேசுராஜன் வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் .கோ கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இசை ஆசிரியை பிரதீபா மற்றும் மாணவிகள் லட்சுமிநரசு, சிவப்பிரியா, கல்யாணி, மது பிரியா, பிரவீனா ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு பாடலை இசையோடு பாடினார்.
மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு விழிப்புணர்வு பாடலை இசையோடு பாடிய பள்ளி மாணவிகளையும் உருவாக்கிய இசை ஆசிரியர் ஜேசுராஜன், பிரதீபா, பள்ளி முதல்வர் உஷாராமன் ஆகியோரைப் பாராட்டினார்.
நிகழ்வில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.