/* */

நெல்லை-ரயிலில் பதுக்கி கொண்டு வந்த 180 மதுபாட்டில்கள் பறிமுதல் -2 பேர் கைது

ரயிலில் கடத்திவரப்பட்ட 180 மது பாட்டில்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை-ரயிலில் பதுக்கி கொண்டு வந்த 180 மதுபாட்டில்கள் பறிமுதல்  -2 பேர் கைது
X

நெல்லை-ரயிலில் பதுக்கி கொண்டு வந்த 180 மதுபாட்டில்களுடன்  கைது செய்யப்பட்ட 2 பேர்.

சுதந்திரதின விடுமுறையை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்பதற்காக பாண்டிசேரியில் வாங்கிய மது பாட்டில்களை நெல்லைக்கு ரயிலில் பதுக்கி கொண்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, இரண்டு வாலிபர்கள் நான்கு அட்டைப் பெட்டிகள் மற்றும் ஒரு சாக்கு மூட்டையுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுள்ளனர். போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், இருவரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தம் (21) மற்றும் விக்னேஷ் (20) என்பதும், சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் கும்பகோணத்தில் ஏறி நெல்லை சந்திப்பு நிலையத்தில் இறங்கியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மொத்தம் தலா 750 மில்லி கொள்ளளவு கொண்ட 180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். மதுபாட்டில்களை பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்ததாக விசாரணையின் போது இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி தலைமறைவானது தெரியவந்துள்ளது.

அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த கருங்கடல் பகுதியை சேர்ந்த பீட்டர் பிரபாகரன் தனது நண்பர்கள் மூலம் புதுச்சேரியில் இருந்து இதுபோன்று மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுதினம் சுதந்திரதினம் என்பதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்பதால் தனது நண்பர்களான சிவானந்தம் மற்றும் விக்னேஷிடம் மதுபாட்டில்களை வாங்கி வரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் போலீசிடம் சிக்கி விட்டனர். எனவே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பீட்டர் பிரபாகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 14 Aug 2021 1:47 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்