முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம்
முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம் . நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS
முகநூல் நண்பர்கள் குழு சார்பில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. ஏழை குடும்பங்கள் மற்றும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பழமையான வீடுகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நெல்லை பேட்டையில் இன்று காலை வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்.பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகக்கவசங்கள் அணிந்த படியே வந்திருந்தனர். முகக்கவசம் அணியாமல் வந்த ஒரு சிலருக்கு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் கூறுகையில், கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அனைவரும் அணிந்து கொள்ள வேண்டும். இந்த பணியை முகநூல் நண்பர்கள் குழுவினர் மிக சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்கு பாராட்டுக்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹர சண்முகம், ஆறுமுகம், பாளையங்கோட்டை சமாதானபுரம் தொழிலதிபர் முருகப்பன், ரெட்சோன் கணபதி மாரியப்பன், அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குனர் மகேஷ், டேனியல் ஆசீர், பேட்டை பவுல் சவேரிராஜ், முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.