Begin typing your search above and press return to search.
கனரக வாகன முனையத்தை பயன்படுத்த ஆணையாளர் வேண்டுகோள்.
பழைய பேட்டை இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கனரக வாகன முனையத்தை ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 32 திட்டப்பணிகள் ரூ.319.02 கோடியில் முடிக்கப்பட்டும், 50 திட்டப்பணிகள் ரூ.619.72 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றது.
திருநெல்லிே மண்டல பகுதியில் உள்ள பேட்டை மற்றும் பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள புதியதாக கனரக வாகன முனையம் ரூ.14.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கனரக வாகன சரக்கு முனையத்தில் உணவகங்கள், புக்கிங் அறைகள், ஒட்டுநர் ஒய்வு அறைகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்திற்கு வசதியாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கனரக ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தாமல் வாகன முனையத்தை பயன்படுத்த மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.