Begin typing your search above and press return to search.
நெல்லை அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து மான் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், சேதுராயன்புதூரில், விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து மான் பரிதாபமாக இறந்தது.
HIGHLIGHTS
நெல்லையை அடுத்துள்ள சேதுராயன்புதூர் கிராமத்தில் அந்தோணி என்பவரின் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில், இன்று மான் ஒன்று தவறி விழுந்துள்ளது.
கிணற்று நீரில் தத்தளித்த மானை கண்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த, பேட்டை தீயணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த மானை கயிறு கட்டி மீட்டனர். ஆனால் அதற்குள் மான் இறந்து விட்டது. இறந்த மானை, கங்கைகொண்டான் வனத்துறையினரிடம், தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.