நெல்லையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லையில், வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள், அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, வாக்கு எண்ணும் மையத்திற்கு செய்தி சேகரிக்க செல்ல இருக்கும் செய்தியாளர்கள் அனைவருக்கும் , கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், செய்தியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது.
இதில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, நெகட்டிவ் என்று சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு ஊசி போட்டவர்கள் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதிப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.