கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரிடம், காணொலி மூலம் கலெக்டர் உரையாடல் !
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பொதுமக்களிடம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காணொலி மூலம் உரையாடினார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் உணவு வகைகள் போன்றவை முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டு அறிவதற்காக இணையதள வசதி ஏற்பாடு செய்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரிகள் திருமண மண்டபங்களை சிகிச்சை மையமாக மாற்றி கொரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை மையங்களில் அளிக்கப்படும் மருந்துகளை நோயாளிகள் உட்கொண்டு அனைவரும் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு காணொலி காட்சி வாயிலாக கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது கணேஷ்குமார் மாவட்ட தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன் ஆறுமுகநயினார் கலந்துகொண்டனர்.