/* */

சேரன்மகாதேவியில் மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் அதிமுகவில் இணைவு

சேரன்மகாதேவியில் மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைவு

HIGHLIGHTS

சேரன்மகாதேவியில் மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் அதிமுகவில் இணைவு
X

சேரன்மகாதேவியில் மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதியில் மாற்று கட்சியை சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆலோசனையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை-கணேச ராஜா முன்னிலையில், சேரன்மகாதேவி நகர செயலாளர் பழனிகுமார் ஏற்பாட்டில், அ.இ.அ.தி.மு.க கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பெண்கள் - ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று நெல்லை தச்சநல்லூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா முன்னிலையில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் கட்சியில் இணைந்த அனைவருக்கும் அதிமுக பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, நகர அவை தலைவர் ஐசக்பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், இளைஞர் அணி செயலாளர் மாசானம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார், மாநில பேச்சாளர் சவுண்ட் சரவணன், பெட்டி கடை சுப்பிரமணியன், கோபால், பாஸ்கர், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2022 1:37 AM GMT

Related News