"வணக்கம் நெல்லை" 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் "வணக்கம் நெல்லை" கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் "வணக்கம் நெல்லை" கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் உள்ள குறைகளை 24 மணி நேரத்தில் சரி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் குறைகளை தீர்க்கும் "வணக்கம் நெல்லை" கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:-
வணக்கம் நெல்லை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 9786 566111 நம்பர் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தகவல்கள் அனுப்பப்படும் என்றார்.
பொதுமக்கள் அனைத்து குறைகளையும் தங்கள் இருப்பிடத்திலிருந்து வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வகை செய்யும் வகையில் வணக்கம் நெல்லை என்ற புதிய கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைக்கப் பட்டுள்ளது.புகார்களின் அடிப்படையில் உடனடியாக தீர்வுகள் அளிக்கப்படும்.பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.