கொரானா தொற்றை தடுக்க விழிப்புணர்வு பேரணி
நெல்லை பேட்டை பகுதியில் மாநகர காவல்துறை சார்பாக...
HIGHLIGHTS
கொரானா வைரஸ் தொற்றை தடுக்க நெல்லை பேட்டை பகுதியில் மாநகர காவல்துறை சார்பாக காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி
வேகமாக பரவி வரும் கொரானா தொற்றை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
ஊரடங்கு தமிழகமெங்கும் அமல் படுத்தப்பட்ட நிலையில்.. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்கும் வகையிலும்...
கொரானா தொற்று குறித்து பொதுமக்கள் அறியும் வகையிலும் நெல்லை மாநகர காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
மாநகர காவல் ஆணையர் அன்பு IPS உத்தரவின் பேரில் துணை ஆணையர் சீனிவாசன் மேற்பார்வையில் நகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது
நெல்லை சந்திப்பு பகுதி மற்றும் பேட்டை பகுதிகளில் மாநகர காவல் துறை சார்பாக ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ..விழிப்புணர்வு ஒவியங்கள். வரையும் நிகழ்வுகள் மற்றும் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது
மாநகர காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் தச்சநல்லூர். பேட்டை, சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர்கள்... ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.