/* */

தூத்துக்குடி: அக்.9ல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

வருகிற 9ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி: அக்.9ல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (0910.2021) அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர் தனது 1.ஆதார் அட்டை, 2.வாக்காளர் அடையாள அட்டை 3.முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மின்னணு குடும்ப அட்டை தேவைப்படுவோர் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2021 8:47 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...