தூத்துக்குடி: அக்.9ல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
வருகிற 9ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (0910.2021) அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர் தனது 1.ஆதார் அட்டை, 2.வாக்காளர் அடையாள அட்டை 3.முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மின்னணு குடும்ப அட்டை தேவைப்படுவோர் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.