தூத்துக்குடியில் புதிய நகர பேருந்து சேவை தொடங்கிவைத்த கனிமொழி எம்பி
தூத்துக்குடியில் புதிய நகர பேருந்து சேவையை கனிமொழி எம்பி துவக்கிவைத்து அதில் பயணம் செய்தார்.
HIGHLIGHTS
தூத்துக்குடியில் நகர வழித்தட பேருந்துகளை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்பி துவக்கி வைத்து நகர பேருந்தில் பயணம் செய்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி, திரேஸ்புரம், முள்ளக்காடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த பேருந்துகள் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் நகரப்பேருந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முள்ளக்காடு மற்றும் தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் புதிய வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நகரப் பேருந்துகளை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பயணம் செய்தனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து மில்லர்புரம் வரை சென்றது.