தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏலம் விடப்பட்டது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் - 35, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் - 15 என மொத்தம் 51 வாகனங்கள் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் இன்று (04.10.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி கோட்ட கலால் தாசில்தார் சந்திரன், அரசு தானியங்கி பனிமனை உதவியாளர் மகேஷ் பாபு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.