Begin typing your search above and press return to search.
ஏப்.25 ம் தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஏப்.25ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப் 25 ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் (கோழி, ஆடு, மீன் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும்) மூடியிருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் திறககப்பட்டிருந்தால் அரசு விதிகளின்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.