/* */

சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
X

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் விழாக்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கொடியேற்றும் நிகழ்ச்சியானது மிக எளிமையாக நடத்தபட்டது.

இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.கொடி மரம் முன் சுவாமி சங்கரராமேஸ்வரர்,அம்பாள் பாகம்பிரியாள் அலங்கரித்து வைக்கப்பட்டு கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டன. தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு தீபாராதனைகள் முடிந்த பின்பு பக்தர்கள் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தினசரி காலை, மாலை 2 வேளையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். சுவாமி, அம்பாள் சப்பர பவனி கோவில் மாடவீதிகளில் நடைபெறும்.சித்திரை திருவிழா 10 நாள் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!