/* */

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
X

தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட செஸ் அசோசியேசன் மற்றும் கேவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து 3வது கேவிஎஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் செஸ் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.போட்டிகளை கேவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாலமுருகன் தலைமையில் முதல்வர் சாந்திரோஜா துவக்கி வைத்தார். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் மெலின்டா சுசன் தாமஸ், மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் கற்பகவள்ளி ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கேவிஎஸ் பள்ளி முதல்வர் சாந்தி ரோஜா கூறுகையில், பள்ளி மாணவர்களிடம் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆப்லைன் முறையில் போட்டிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Updated On: 28 Feb 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...