/* */

தூத்துக்குடியில் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணி
X

சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று, வட்டார போக்குவரத்து அலவலுலகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விநாயகம் முன்னிலையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் கலந்து கொண்ட நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவதால் உயிரிழப்பை தடுக்கலாம் என்ற வகையில் சீட் பெல்ட் அணிந்து பங்கேற்றனர். பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி 3வது மைல், புதிய மாநகராட்சி வழியாக நகரின் முக்கிய சாலை வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பீச்ரோடு மாதா கோவில் முன்பு நிறைவடைந்தது. இதில் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், யெங் இந்தியா தலைவர் பொன்குமரன், உதவி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்‌ஸ், மணி மற்றும் கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Feb 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...