ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள் (மாதிரி படம்)
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
ஈரோடு மாவட்டத்தில் 356 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 826 மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினர். இவர்களில் 23 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்த நிலையில், 160 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து உள்ளது.
இவற்றில், 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன. இதேபோல், 1 நகரைப் பள்ளி, 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 18 தனியார் பள்ளிகள், 91 மெட்ரிக் பள்ளிகள், 2 நலத்துறை பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 160 பள்ளிகள் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu