தூத்துக்குடி மாவட்டத்தில் சிலிண்டர் விலை நிர்ணயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதால், நுகர்வோர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.758.50/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.757.00/-ஆகவும் , கழுகுமலையில் ரூ.765.50/- , கயத்தாரில் ரூ.768.50/- , எட்டையபுரத்தில் ரூ.757.00/- , சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.775.50/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.758.50/- ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.759.00/- ஆகவும் ,குளத்தூரில் ரூ.759.50/- எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.758.50/- எனவும், பிப்ரவரி 1 ம் தேதி முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளார்.