Begin typing your search above and press return to search.
திருவாரூரில் மீண்டும் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் திரண்டு வந்த மாணவர்கள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்
HIGHLIGHTS
கொரோனா ஓமிக்கரான் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
திருவாரூர் பள்ளிகளில் மாணவர்கள் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தும், மாணவர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதனை செய்த பின்பு பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்பறையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்,.சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.