தடுப்பூசிக்கு ஆரோக்கிய சேது செயலி மூலம் முன் பதிவு
கொரோனா தடுப்பூசிக்கு ஆரோக்கிய சேது செயலி மூலம் முன் பதிவு செய்யும் முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று நுகர்வோரி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான முக கவசம், பாதுகாப்பு கவச உடைகள், கிருமி நாசினி, கை சுத்திகரிப்பான் , வெப்பமானி, ஆக்சிஜன் அளவைமானி போன்றவற்றையும், மற்றும் முக்கிய மருந்துகள் பதுக்கப்படுவதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பொருட்களின் விலை அதிகரிக்காமலும், தரமான பொருட்கள் தட்டுப்பாடின்றி எளிதில் கிடைக்கவும் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போடும் செயல்முறை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. முன்கள தொழிலாளர்களுக்குப் பிறகு, இப்போது தொற்று உள்ளதாக கருதப்படும் அறிகுறிகளை கொண்ட மூத்த குடிமக்களும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவிட்-19 தடுப்பூசியை பெறுகிறார்கள்.
தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வைத்திருப்பதும் முக்கியம், ஏனெனில் இது வரும் மாதங்களில் சர்வதேச பயணம் மற்றும் பல விஷயங்களுக்கு தேவைப்படலாம் என்ற நிலையில் சான்று அளிப்பதில் அல்லது மொபைல் எண் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் சான்றை இணைய வழி மற்றும் ஆரோக்கிய சேது மொபைல் (ஆப் ) செயலி மூலம் பெற முடிவது இல்லை. இதனால் இரண்டாம் நிலை தடுப்பூசி மற்றும் வெளியூர் செல்லும் போது இச்சான்றை காட்ட இயலாத நிலை இருக்கிறது எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அனைவருக்கும் சான்று கிடைக்க உரிய வழிமுறைகளை கொண்டுவர வேண்டும்.
ஆரோக்கிய சேது என்ற மொபைல் (ஆப்) செயலி மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்க்கு நாள் மற்றும் அருகாமை தடுப்பூசி மையங்களை தேர்வு செய்ய முடியும் என அறிவிக்கபட்ட நிலையில் மேற்படி ஆரோக்கிய சேது செயலி மூலம் முன்பதிவு செய்வதில் பல்வேறு தடைகள் மற்றும் முன்பதிவை செய்ய இயலவில்லை.
எனவே மத்திய, மாநில அரசு மற்றும் பொது சுகாதார துறை எல்லாம் டிஜிட்டல் மையம் என்ற நிலையில் மக்களின் மிக முக்கிய பணியில் தடுப்பூசி அவசியம் என்ற நிலையில் ஆரோக்கிய சேது செயலி மூலம் முன் பதிவு செய்யும் முறையை செயல்பாட்டுக்குக்கு கொண்டுவர உரிய நடவடிக்கையை போர்கால அடிப்படையில் செய்திட மக்கள் நலன் கருதி கோருகிறோம்.