திருவாரூர் பள்ளிகளில் வ.உ. சிதம்பரனார் நகரும் புகைப்பட கண்காட்சி
வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வந்தது.
HIGHLIGHTS
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வராலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், நகரும் புகைப்பட கண்காட்சி வாகனம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்தொடர்ச்சியாக திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் வேலுடையார் பள்ளிக்கு இன்று நகரும் புகைப்பட கண்காட்சி வாகனம் வந்தடைந்தது. இந்த வாகனத்தில் இருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு, அங்கிருந்த வ.உ.சியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி குறித்து அறிந்து கொண்டனர்.
இந்த வாகனம் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு பயணித்து அனைத்து பள்ளிகளுக்கும் செல்கின்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேவா, நகர மன்றத் தலைவர் புவனப்பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.