Begin typing your search above and press return to search.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
HIGHLIGHTS
கடந்த மாதம் பெய்த தொடர் மழைக் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் மூழ்கியும், அறுவடைக்கு தயாராயிருந்த நெற்பயிர்கள் சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே உடனடியாக தமிழக அரசு ஏக்கர் ஒன்றிற்க்கு 30000 ஆயிரம் வழங்க வேண்டும், வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் தமிழக அரசு கோரிய ரூ.4625 கோடி நிவாரநிதியை உடையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என மாநில, மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 250க்கும் மேற்பட்டோர் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.