/* */

திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு மாவட்ட நீதி துறை சார்பாக சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
X

 மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்ற சமரச விழிப்புணர்வு பேரணி

சமரச விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை சமரச விழிப்புணர்வு பேரணி மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமரச தீர்வு நாள் மற்றும் தீர்வு வாரம் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஏப்ரல் 6 தேதி முதல் 13-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுவதை ஒட்டி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து வழக்குகளை விரைந்து முடித்து கொள்ளலாம் என இந்த பேரணியை மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பேரணியில் மாவட்ட தலைமை நீதிபதி சாந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், சார்பு நீதிபதி வீரணன், உரிமையியல் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2022 2:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...