/* */

நிவாரணம் வழங்கக்கோரி திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி, திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நிவாரணம் வழங்கக்கோரி திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். 

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி, திமுக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று திருவாரூரில், அதிமுக மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்வேல், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் சூரிய சாமி, நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  3. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  4. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  5. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  6. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  7. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  9. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்