3 முறை முதல்வர் பதவி வகித்தாலும் தலைமையிடம் கட்சியை பத்திரமாக ஒப்படைத்தவர் ஓபிஎஸ்
Despite being the Chief Minister for 3 terms it was OPS who handed over the party to the leadership
HIGHLIGHTS
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே எதிர்பார்த்தபடியே (திட்டமிட்டபடி) மீண்டும் தொடங்கியுள்ள யுத்தம் . சென்னை முதல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.
மூன்று முறை முதல்வர் பதவி வகித்தும், ஆட்சியையும், கட்சியையும் தலைமையிடம் பத்திரமாக திருப்பி கொடுத்தோம். ஆனால் ஒரே ஒருமுறை முதல்வர் வாய்ப்பு வழங்கியதற்காக கட்சி தலைமையையும் வீழ்த்தி, ஆட்சியையும் முழுமையாக கைப்பற்றி, தேர்தலில் தோல்வியடையச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பகிரங்கமாக குற்றம் சுமத்த தொடங்கி உள்ளனர். மீண்டும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வர வேண்டும். அந்த தலைமை ஓ.பி.எஸ் ஆகத்தான் இருக்க வேண்டும். அப்போது தான் கட்சி வளரும் என அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.
சென்னையில் நடந்த அதிமுக நிர்வாக குழுவில் இந்த ஒற்றைத் தலைமை பிரச்னை திட்டமிட்டுத்தான் எழுப்பப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்களும் இந்த பிரச்னை வரும் என எதிர்பார்த்தே நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட இந்த பிரச்னைக்கு முடிவு எட்டப்படாமலேயே முடிந்து. ஆகவே, நேற்று இரவே ஓ.பி.எஸ் அணியினர் போஸ்டர் யுத்தத்தை தொடங்கினர். சென்னை மட்டுமின்றி தேனி மாவட்டம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
இன்று விடிந்ததும் இப்படி ஒரு போஸ்டர் யுத்தம் நடக்கும் என்பதை இ.பி.எஸ் அணியினரும் எதிர்பார்த்த ஒன்றுதான். எத்தனை போஸ்டர்களை, எப்படி வடிவமைத்து ஒட்டினாலும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு தான் ஒற்றைத்தலைமை யாரென முடிவு செய்யும். எனவே பொதுக்குழு, செயற்குழுவை கைப்பற்றும் வேலைகளில் நாங்கள் இறங்கி உள்ளோம் என இ.பி.எஸ் அணியினர் தெம்புடன் கூறி வருகின்றனர். இப்போதைக்கு இந்த போஸ்டர் யுத்தத்தில் ஓ.பி.எஸ். கை ஓங்கியிருந்தாலும், தலைமையை கைப்பற்றுவது யார்? என்பதை பொறுத்திருந்து அமைதியாக பாருங்கள் என இ.பி.எஸ் அணியினர் கூறுகின்றனர். இந்த நிலையில் இப்போதைக்கு இந்த யுத்தம் முடிவுக்கு வராது என்றே தோன்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.