/* */

திருட்டுக்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தும் கிராம ஊராட்சிகள்

தேனி மாவட்டத்தில் கிராமங்களில் நடைபெறும் திருட்டுக்களை தடுக்க ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

திருட்டுக்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தும் கிராம ஊராட்சிகள்
X

பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.  

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், பல்வேறு திருட்டு சம்பவங்கள் அதிகளவி்ல் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க நகர்பகுதிகளில் வசதியான குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இதனால் திருடர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளையே குறி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து போலீசார் இரவு ரோந்து சென்றாலும், திருடர்கள் பதுங்கியிருந்து போலீசாரிடமிருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். இந்த பிரச்னைக்கு கண்காணிப்பு கேமரா பொறுத்துவதே நிரந்தர தீர்வு என போலீசார் கிராம மக்களிடம் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போலீசாரின் அறிவுரையின்பேரில், கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகங்கள் மூலமும், ஸ்பான்சர்கள் மூலமும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதேபோன்று அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 18 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!