Begin typing your search above and press return to search.
மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் நாளன்று நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றலாம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்ஆலிவர்பொன்ராஜ் வெளியிட்ட தகவல்: 01,05,2022 அன்று ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் நாளன்றுகாலை 11,00 மணிமுதல் 1,00 மணிவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துதுறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர்.
எனவே. இக்கிராமசபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.