/* */

ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு - அமைச்சர் தகவல்

ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கூடிய சூழல் இல்லை என தஞ்சாவூரில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு - அமைச்சர் தகவல்
X

பால்வளத்துறை அமைச்சர்  தஞ்சையில் பேட்டி அளித்தார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தஞ்சையில் ஆவின் பால் விற்பனை நிலையங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நாசர் கூறியாவது.

ஆவின் பால் விலை குறைப்பால் 270 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

ஆவின் பால் விற்பனையும் 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. சென்னையில் 12 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கூடிய சூழ்நிலை இல்லை என தெரிவித்தார்,

ஆவின் பால் நிலையங்களில், டீ மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யகூடாது எனவும் அமைச்சர் எச்சரித்தார். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் கூட முதல்வர் கொரோனா பரவலை முறியடிப்பார்.

கடந்த ஓராண்டாக கொரோனா பரவலை முந்தைய அரசு கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது 25 நாட்களில் பொது மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் மெழுவர்த்தி போல் செயல்பட்டு கொரோனா பரவலை முறியடித்து வருகிறார் என்றார்.

Updated On: 6 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...