Begin typing your search above and press return to search.
கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கர்நாடக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.