Begin typing your search above and press return to search.
குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உக்கடை கருப்பை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கிரிஜா(43). இவர்களின் உறவினர் வீரையன் மகன் வினோத் என்கிற முருகானந்தம். இவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கிரிஜாவை வினோத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.