Begin typing your search above and press return to search.
தஞ்சாவூரில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என தெரிவித்துள்ள, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று டெல்டா மாவட்டங்களில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டதில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தஞ்சை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் கர்நாடக முதலமைச்சர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தமிழக அரசு அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.