Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர் தகவல்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்டியூர் அருகே குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளாதால், பழுதடைந்த குழாய்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
இதனால் தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில், வருகிற 23ஆம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு, குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரவணவக்குமார் தெரிவித்துள்ளார்.