அங்கன்வாடி பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் -பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை தனியார் கூட்ட அரங்கில் அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் பானு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், கடந்த 26 வருடங்களாக மேலாக பணியாளர்களாகவே, பணி செய்யும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களை பலதுறை பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும், கொரோனா காலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தான் அதிகமாக கொரோனா பணியனை செய்து வந்துள்ளனர். அதனால் அவார்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.