Begin typing your search above and press return to search.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
உலக எய்ட்ஸ் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில், தஞ்சாவூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் நிறைவுப்பெற்றது.