/* */

தஞ்சை பெரிய கோவிலில் வாராஹிக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வரும், ஆஷாட நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை பெரிய கோவிலில் வாராஹிக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
X

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வரும், ஆஷாட நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும், இதில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். கடந்த 9ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய, ஆஷாட நவராத்திரி விழாவில், தினமும் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், மாதுளை, நவதானியம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்றன . விழாவின் பத்தாம் நாளான இன்று காய்கறி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்திரியின் நிறைவு நாளான நாளை வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் கோவிலுக்குள் உற்சவர் புறப்பாடும் நடைபெற உள்ளது. அனைவரும் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 18 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்