ரமலான் சிறப்பு தொழுகை
தஞ்சாவூர்
HIGHLIGHTS
புனித ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பு முடிந்த நிலையில், இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டு மாடியில் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதில் 30 நாட்கள் நோன்பினை இறைவன் ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள அனைத்து மக்களையும் கொடிய நோயில் இருந்து காப்பாற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டி இஸ்லாமியர்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதாக கூறினர்.
கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக ரமலான் பண்டிகையானது எளிய முறையில் நடைபெறுகிறது. இதே போன்று தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டு மாடியில் தொழுகையில் ஈடுபட்டனர்.