/* */

பனி மூட்டத்தால் மறைந்த தஞ்சை பெரியகோவில்

பனி மூட்டத்தால் மறைந்த தஞ்சை பெரியகோவில்
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்தால் பெரிய கோவிலின் கோபுரம் முற்றிலும் பனியால் மறைந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பகல் வேளையில் அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த ஒரு வார காலமாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை மாவட்டம் முழுவதும் பனி மூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால், சாலைகளில் வரும் வாகனங்கள் தங்களுடைய முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். பனி மூட்டம் அதிகளவில் இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் தஞ்சை பெரியகோவில், பனி மூட்டத்தால் முற்றிலும் மறைந்ததால் பெரிய கோவிலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காலை 8 மணி வரை பெரிய கோவிலின் கோபுரம் சுற்றிலும் பனியால் சூழப்பட்டு இருந்ததால், கோவில் இருந்த இடமே தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.

Updated On: 28 Feb 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...