பனி மூட்டத்தால் மறைந்த தஞ்சை பெரியகோவில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்தால் பெரிய கோவிலின் கோபுரம் முற்றிலும் பனியால் மறைந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பகல் வேளையில் அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த ஒரு வார காலமாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை மாவட்டம் முழுவதும் பனி மூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால், சாலைகளில் வரும் வாகனங்கள் தங்களுடைய முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். பனி மூட்டம் அதிகளவில் இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் தஞ்சை பெரியகோவில், பனி மூட்டத்தால் முற்றிலும் மறைந்ததால் பெரிய கோவிலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காலை 8 மணி வரை பெரிய கோவிலின் கோபுரம் சுற்றிலும் பனியால் சூழப்பட்டு இருந்ததால், கோவில் இருந்த இடமே தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.