Begin typing your search above and press return to search.
தஞ்சையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் 1510 மையங்களில் தொடங்கியது.
நாடு முழுவதும் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறும் நிலையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் 1510 மையங்களில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 141 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார்.