Begin typing your search above and press return to search.
சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. ஊரடங்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.