/* */

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

குடிநீர் தொட்டியில் மனித கழிவை கொட்டிய சாதி வெறியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
X

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித கழிவை கொட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, குடிநீர் தொட்டியில் மனித கழிவை கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் பினாமி பேரில் போலி இட ஒதுக்கீடு மூலம் விலை நிலத்தை அளித்து பெட்ரோல் பங்க் அமையும் முயலும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி நாடாளுமன்றச் செயலாளர் வர்கீஸ், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jan 2023 4:18 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...