/* */

தென்காசி: சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியகொடியை ஏற்றி வைத்தார்.

கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தென்காசி:  சுதந்திர தின விழாவில்  மாவட்ட ஆட்சியர் தேசியகொடியை ஏற்றி வைத்தார்.
X

தென்காசியில் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியகொடியை ஏற்றி வைத்து, கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா வையொட்டி தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.இதில், மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், சமாதானப் புறா மற்றும் மூவர்ண பலூனை பறக்கவிட்டார்.



இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் .குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...