Begin typing your search above and press return to search.
குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை
சட்டவிரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் குறித்த வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று தென்காசி போலீசார் அறிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "உங்கள் பகுதிகளில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்த தகவலை 9385678039 என்ற தென்காசி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். நீங்கள் அளிக்கும் தகவல் ரகசியம் காக்கப்படும்" என்று, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.