/* */

தென்காசி: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

வீரகேரளம்புதூர் பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

HIGHLIGHTS

தென்காசி: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
X

தென்காசி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது :-

வீரகேரளம்புதூர் வட்டம் வாடியூர், அச்சங்குட்டம், குறிச்சாம்பட்டி, ஊத்துமலை, வீராணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தற்போது நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம், கடலை, மற்றும் காய்கறி வகைகளை பயிரிட்டுள்ளனர். இந்தப் பயிர் வகைகளை வெள்ளக்கல் பொத்தை பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள், மான் ஆகியவை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளையும் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனே தலையிட்டு பொத்தை பகுதியை சுற்றி வேலி அமைத்து பன்றிகள் விவசாய நிலங்களுக்கு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Nov 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்