/* */

வேட்பாளர்களுடன் தென்காசி கலெக்டர் ஆலோசனை

வேட்பாளர்களுடன் தென்காசி கலெக்டர் ஆலோசனை
X

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடு மற்றும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் மே-2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் பத்திரப்படுத்தபட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On: 23 April 2021 6:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு