குற்றாலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் வாக்குவாதம்
குற்றாலத்தில் வாடகை பாக்கி தராத கடைகளுக்கு சீல். வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்று குற்றாலம். இந்த குற்றாலத்தில் குற்றாலநாதர் குழல்வாய்மொழி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு 150 வகையான கட்டிடம் மற்றும் காலி மனைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோவிலுக்கு ஏராளமான வருவாய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் காலி மனைகள் இருந்து வாடகை பாக்கி மற்றும் குத்தகை பாக்கி கொடுக்கப்படவில்லை. இதனால் 5 கோடியே 88 லட்சத்துக்கும் மேல் வரி பாக்கி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாடகை பாக்கி மற்றும் குத்தகை பாக்கி கொடுக்காத கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கைகளில் இன்று காலை கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள் கோவில் ஊழியரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் ஊழியர்கள் 3 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்து விட்டுச் சென்றனர். கொரோணா காலத்தில் உள்ள வாடகை பாக்கியை மட்டும் கோயில் நிர்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.