/* */

பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Demonstratives - தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

Demonstratives | Tenkasi News
X

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Demonstratives- அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைத்தேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் கூறுகையில், பொதுத் குழுவிற்கு கலந்து கொள்ள சென்ற அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வத்தை "தாக்க முயன்று, அவரது காரின் டயரை சேதப்படுத்தி அவமானப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் கோஷ்டியினரையும், அவரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், 3000 பேர் கொண்ட கட்டத்தில் ஓபிஎஸ்-ற்கு உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு எங்கள் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் எடப்பாடி தலைமையிலான கட்சிக்கு தமிழக முக்குலத்தோர் சமுதாய ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஆகி விடும் என்றும், இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் எங்கள் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 July 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...