தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
தென்காசியில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்ந்தெடுக்கும் பணி ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு முன்னேற்பாடாக தேர்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக முதற்கட்ட தேர்ந்தெடுத்தல் (First Rendo Mization) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 6 நகராட்சிகளுக்கும் 17 பேருராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.